திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்

Loading

திருவள்ளூர் அக் 30 :
 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் பல்வேறு துறைகள் சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கலந்து கொண்டு கலந்தாய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், பள்ளி கல்வித்துறை, நகராட்சி, பேரூராட்சி, பொதுப்பணித்துறை, வேளாண்மை – உழவர் நலத்;துறை, பொது விநியோகத் திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தோட்டக்கலைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் கலந்துரையாடி, ஆலோசனைகள் வழங்கி, அத்துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டம் (பயனாளிகள் தாமாக முன்வந்து வீடு கட்டிக்கொள்ளும் திட்டம்)-த்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு கான்கீரிட் வீடு கட்டிக்கொள்வதற்கு ஏதுவாக அரசு மானியத் தொகை ரூ.2.10 இலட்சம் வழங்கப்படுவதற்கான ஆணைகளையும், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு  பெறுவதற்கான ஆணைகளையும் ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டத்தின் கீ;ழ் பயனடைந்த பயனாளிகளிடமும், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகளோடும்  ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் கலந்துரையாடி, அப்பயனாளிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
இதில் பேரூராட்சிகள் ஆணையர் இரா.செல்வராஜ்,வளர்ச்சி கூடுதல் ஆட்சியரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலருமான செ.ஆ.ரிஷப்,ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ்,இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.அசோகன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பொது மேலாளர் ராகேஷ் குப்தா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மண்டல மேலாளர் ரவி ரஞ்சன் சகாய் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *