தருமபுரியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

Loading

தருமபுரி,
தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி தருமபுரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர். பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஐஸ்வர்யம் முருகன், வெங்கட்ராஜ், பிரவீன், மாவட்ட துணைத் தலைவர்கள் சோபன், முரளி, சிவன், கிருத்திகா, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி. ராமலிங்கம் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தமிழக அரசு எந்தவித திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து  கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் பொன்னுசாமி, தருமபுரி மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயம், அரூர் ஒன்றிய துணை தலைவர் சிவானந்தம், மாவட்ட செயலாளர்கள் தெய்வமணி, சரிதா, கிருஷ்ணவேணி, மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் இமானுவேல், ஊடகப்பிரிவு தலைவர் மதியழகன், பிற்பட்டோர் பிரிவு தலைவர் காவேரி வர்மன், இளைஞர் அணி தலைவர் மவுனகுரு, பட்டியல் அணி மாவட்ட தலைவர் களிர்கண்ணன், மகளிர் அணி தலைவர் சங்கீதா மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் நகர  தலைவர் ஜிம் சக்திவேல் நன்றி கூறினார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *