“கற்கும் போது சம்பாதிக்க    ஆரம்பியுங்கள்” என்ற தலைப்பில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சி…

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் கற்கும் போது பணம் சம்பாதிப்பது எப்படி என்ற தலைப்பில் இன்னோவேஷன் ஸ்டார்ட் அப் கிளப் சார்பாக  கண்காட்சி  நடை பெற்றது. இதில் மாணவ மாணவிகள் தாங்கள் தயாரித்த வீட்டு அலங்கார பொருட்கள் மற்றும் கைவினைப் பொருள்கள், ஓவியங்கள், கம்பளி நூலால் செய்யப்பட்டபொம்மைகள் மற்றும் அலங்கார பொருட்கள் அனைத்தும்   கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சியை  கல்லூரி முதல்வர் டாக்டர் எட்வர்ட் மற்றும் டாக்டர்     ஸ்டீபன் ஜோன்ஸ் தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சியில் 25 குழு மாணவ மாணவியர்கள்  தாங்கள் செய்த கைவினைப் பொருள்களை காட்சிப்படுத்தினர். இந்த கண்காட்சியில்  சுமார் 2500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதனைஇன்னோவேஷன் ஸ்டார்ட் அப் கிளப் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இதில் பேராசிரியர் பொணிலா பேராசிரியர் ஜிசா மற்றும் ஆசிரியர் ஜெப ஜெனிதா கலந்துகொண்டு சிறப்பித்தனர்….

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *