ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற 31ம் மாத அமாவாசை அன்னதான விழா

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற 31ம் மாத அமாவாசை அன்னதான விழா மற்றும் 4ம் ஆண்டு பசிதீர் திருவிழா ஆற்காடு பேருந்து நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுசசெயலாளர் விஸ்வநாதன், மாநில பொருளாளர் ஜெயக்குமார், மாநிலத் துணைத் தலைவர் ரஞ்ஜித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெய்மாருதி சரவணன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழிலதிபரும் எஸ். டி. எஸ். மஹால் உரிமையாளருமான சேகர், அண்ணாமலையார் மோட்டார்ஸ் உரிமையாளர் தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்பித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, உதவி ஆய்வாளர்கள் மகாராஜன், உதயசூரியன் மற்றும் காவலர்கள், இமைகள் கல்வி மற்றும் பொதுநல அறக்கட்டளை நிறுவனததலைவர் சையத்பாரூக் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர். இதில் சுமார் 1000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இறுதியில் மாநிலத் துணைச்செயலாளர் சண்முகம் நிர்வாகிகள் ஸ்ரீதர், சக்திவேல் ஆகியோர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *