தூய்மைப்பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கல்
சென்னை,அக்- 27
தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி சென்னை ராயபுரம் சிங்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரிகள் கெளரவித்தனர்
சென்னை ராயபுரம் சிங்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரிகள் நல சங்கத்தினர், தீபாவளி பண்டிகையையொட்டி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி கௌரவித்தனர். இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குபுத்தாடைகளும், வெஜிடபிள் பிரியாணி விருந்தும் வழங்கப்பட்டது கெளரவத்தலைவர் சிந்து எம்.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிங்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரிகள் நல சங்க தலைவர் பட்டவெட்டி டி.உதயராஜ்,துணை தலைவர் எச்.தமிம் அன்சாரி,கெளரவஆலோசகர் எச்.மொய்தீன், ஆலோசகர் மகேந்தர் வடேரா, துணை செயலாளர் எஸ்.எம்.முத்துவாப்பா,துணை தலைவர்கள்\எஸ்.வெங்கடராமன்,என்.டி.சுந்தர்ராஜன்,எஸ்.இஸ்மாயில்,எச்.இஸ்மாயில்,செயலாளர் பி.ஜெயபால்,ஜி.விஸ்வநாதன்,மெளசம் பாஷா,சகுபர் சாதிக்,எம்.ஜி.கே.அன்பரசு,கே.அருண்பிரசாத் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்