டி.ஐ.ஜி., ஆய்வு.,!

Loading

கோவை சரக டி.ஜ.ஜி முனைவர் M.S.முத்துசாமி அவர்கள் பங்களாப்புதூர் மற்றும் கடம்பூர் காவல் நிலையங்களை ஆய்வு மேற்கொண்டார்
இவ்விரு காவல் நிலையங்களின் பதிவேடுகள், வழக்கு கோப்புகள் ஆகியவைகளை ஆய்வு செய்தார்.
மேற்படி காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்.வடிவேல், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களின் குடும்ப நலனை பற்றி விசாரித்து குறைகளை கேட்டறிந்தார். ஆயுள் போது பங்களாபுதூர் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்
அலுவலக பதிவேடுகள், வழக்கு கோப்புகள் பராமரிப்பு மற்றும் வழக்குகளின் கண்டுபிடிப்பு ஆகியவைகளை ஆய்வு செய்து பாராட்டினார். மேலும் ஆன்லைன் சூதாட்டத்தால் எவருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், காவல் துறை – பொதுமக்களின் நண்பனாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. சசிமோகன் ஐ.பி.எஸ் மற்றும்
சத்தி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  A. சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *