திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து பொதுமக்களும் எவ்வித அசம்பாவிதம் இன்றி அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருவள்ளூர் எஸ்பி., பா.சிபாஸ் கல்யாண் செய்தியாளர்கள் சந்திப்பில் தகவல்

Loading

திருவள்ளூர் அக் 23 :
 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் எவ்வித அசம்பாவிதம் இன்றி அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் எஸ்பி., பா.சிபாஸ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எஸ்.பி., பா.சிபாஸ் கல்யாண் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது : தீபாவளி பண்டிகை வரும் 24.10.2022 அன்று  கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் எவ்வித அசம்பாவிதம் இன்றி அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த இரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் வெடிக்கப்பட வேண்டும். மேலும் சீன தயாரிப்பு வெடிகளை விற்பனை செய்யவோ, வெடிக்கவோ கூடாது.பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் ஏதும் அருகில் இல்லாதவாறு பார்த்து பட்டாசு வெடிக்க வேண்டும். குடிசைகள் பக்கத்திலோ, ஓலைகூரைகள் உள்ள இடங்களில் வானவேடிக்கை பட்டாசுகள் வெடிக்ககூடாது.
குழந்தைகள் தனியாக பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பாக பெரியவர்கள் இருக்க வேண்டும்.திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 41 கடைகளின் உரிமைதாரர்கள் இந்த வருடம் பட்டாசு விற்பனை செய்ய உரிமம் கோரி மனு செய்ததில் 25 கடைகளுக்கு பட்டாசு விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டுள்ளது. 16 கடைகளில் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் உரிமம் மறுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., பா.சிபாஸ் தலைமையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 9 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 25 காவல் ஆய்வாளர்கள், 150 உதவி,சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 400 காவலர்களும், 100 ஆயுதப்படை காவலர்களும் 140 பயிற்சி காவலர்களும் மற்றும் 200 ஊர்க்காவல் படையினரும் 22.10.2022 ஆம் தேதி முதல் 25.10.2022 ஆம் தேதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தீபாவளி பண்டிகை நாட்களில் அசம்பாவிதங்களை தடுக்கவும், கையாளவும், விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கவும் திருவள்ளூர் மாவட்டத்தில் மற்ற துறைகளான தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்கவும், அவசர ஊர்திகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சிபாஸ் கல்யாண் தெரிவித்தார்.அதே நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *