ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபாசத்யன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில் இராணிப்பேட்டை உட்கோட்ட  காவல் துணை கண்காணிப்பாளர்  பிரபு அவர்களின் மேற்பார்வையில் ஆற்காடு நகர காவல் ஆய்வாளர்  விநாயகமூர்த்தி அவர்களின் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடந்த16.09.2022 ம்  தேதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த சதிஷ் (29) த/பெ  கிருஷ்ணன் அண்ணாநகர் மாசார்பேட்டை   ஆற்காடு  என்பவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் இருந்து வந்தார்.இந்த நிலையில் 19.10.2022 ம் தேதி மேற்படி நபரை தடுப்புக் காவல் சட்டத்தின்சிறையில் அடைக்க இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்.

மேலும் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சதிஷ் மீது  ஒன்றுக்கு மேற்பட்ட கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு (2021)கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கூறி 10 நபர்கள் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் படியும் 33 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யபட்டு 35 நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.

அதே போல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கூறி இந்த வருடம் (2022)10 நபர்கள் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு 23 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது.மேலும் கஞ்சா மற்றும் குட்கா  விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது ஆற்காடு நகர காவல் நிலையத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆற்காடு நகர காவல் ஆய்வாளர்  விநாயகமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *