திமுகவின் தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் திமுக தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்

Loading

*CHENNAI PRESS CLUB சென்னை பிரஸ் பிரஸ் சார்பில் வாழ்த்துக்களும் ! வேண்டுகோளும் !!*
தமிழ்நாட்டின் ஆளும் கட்சியாக திகழும் திராவிட முன்னேற்ற கழகம் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி அதன் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளரை  தேர்ந்தெடுத்துள்ளது.
அதன்படி திமுகவின் தலைவராக மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், 2 வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ! மேலும் பொதுச்செயலாளராக திரு.துரைமுருகன் அவர்களும், பொருளாளராக திரு.டி.ஆர்.பாலு அவர்களும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஜனநாயகமுறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் தலைமை கழக நிர்வாகிகளாக பலரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுகவின் தலைவராக 2 வது முறையாக தேர்வு பெற்றுள்ள மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளிட்ட திமுக தலைமை கழக நிர்வாகிகள் அனைவருக்கும்  CHENNAI PRESS CLUB சென்னை பிரஸ் பிரஸ் சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதுடன் ஒரு தாழ்மையான வேண்டுகோளையும் முன்வைக்கிறோம்.!
மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும், அவரது தலைமையிலான திமுகவும் ஜனநாயக மரபுகளை பேணி பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் கொண்டதன் அடையாளம் தான் திமுகவின் உட்கட்சி தேர்தலை நடத்தி தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை முறைப்படி தேர்ந்தெடுத்துள்ளீர்கள்!
ஜனநாயகத்தின் மீதான அக்கறையின் காரணமாகதான்  ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் பத்திரிகை துறையினருக்காக திராவிட முன்னேற்ற கழக தலைவரான முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு  பத்திரிகையாளர் நலவாரியம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளது.
இத்தகைய நேரத்தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யபடாத பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் என்ற போர்வையில் ஒரு சுய நல கும்பல் – கடந்த பல ஆண்டு காலமாக  பத்திரிகையாளர்களையும், தமிழக அரசையும் ஏமாற்றி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
பத்திரிகையாளர்களின் பேரமைப்பான CHENNAI PRESS CLUB சென்னை பிரஸ் கிளபுக்காக. தமிழ்நாடு அரசின் பொதுப் பணித்துறை வழங்கியுள்ள இடத்தை சட்டவிரோதமாக அபகரித்து கொண்டு, பல்வேறு சட்டவிரோத முறைகேடுகளை செய்து கொண்டிருக்கும் அந்த சுயநல மோசடி கும்பல் குறித்து பலமுறை புகார் அளித்தும் அவர்கள் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
ஜனநாயகமுறைபடி தேர்தல் நடத்தாமல் – உறுப்பினர்கள் எவரும் வாக்களித்து தேர்வு செய்யபடாமல் தங்களை தாங்களே நிர்வாகிகளாக அறிவித்து கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக CHENNAI PRESS CLUB சென்னை பிரஸ் கிளப் பெயரை முறைகேடாக  பயன்படுத்தி மோசடி செய்து வரும் நபர்கள் மீது, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென CHENNAI PRESS CLUB  சென்னை பிரஸ் கிளப் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம். விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம் என்று தனது வாழ்த்து செய்தியில் தலைவர் செயலாளர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *