தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் காரைக்குடியில் 5வது புத்தக கண்காட்சியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

Loading

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து காரைக்குடி எம். எ. எம் மகாலில் புத்தக கண்காட்சியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு புத்தக விழா குழுவின் தலைவர் முனைவர் சந்திரமோகன் தலைமை வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி, காரைக்குடி கிளை தலைவர் செந்தில்குமார், புத்தக விழாக் குழு அரியமுத்து முன்னிலை வகித்தனர். புத்தக கண்காட்சி செயலாளர் ஜீவானந்தம் வரவேற்புரை ஆற்றினார்.
பல்வேறு பள்ளிகளுக்கு கொடையாளிகள் புத்தகங்களை நூலகங்களுக்கு பரிசாக வழங்கினார்கள். பள்ளி மாணவர்களுக்கு, கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டன.
முனைவர் சண்முகசுந்தரம், எழுத்தாளர் ஜீவசிந்தன், மாரிமுத்து, ராம் பிரபு, நேஷனல் கல்வி குழும்பத்தின் தாளாளர் அரிமா. சையது, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் ராஜு, கல்வி ஆலோசகர் கலைமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முத்து டான்ஸ் அகாடமி முத்துமாரி இளஞ்செழியன் ஒருங்கிணைப்பில் மாணவியர்களின் பரதநாட்டிய கலைநிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. புத்தக விழா குழு உறுப்பினர் குணசேகரன் நன்றி கூறினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கல்லல் கிளைச் செயலாளர் பிரபு, மணிமாறன் நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினர்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள், பதிப்பகத்தார்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *