திருவள்ளூர் மாவட்டத்தில் காணாமல் போன 119 செல்போன்கள் உரியவர்களிடம் எஸ்பி ஒப்படைத்தார் :

Loading

திருவள்ளூர் அக் 09 : திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒராண்டில் செல்போன் காணாமல் போனது மற்றும் திருடு போனது சம்மந்தமாக காவல் நிலையங்களில் பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டது. மேலும் செல்போன் பறிப்பு சம்மந்தமாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.,பா.சிபாஸ் கல்யாண் உத்திரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீனாட்சி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்ட சைபர் பிரிவின் உதவியோடு காணாமல் போன மற்றும் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து தனிப்படை மற்றும் சைபர் பிரிவினர் காணாமல் போன 360 செல்போன்களை உரிய ஆவணங்களின்றி பயன்படுத்தி வந்த நபர்களிடமிருந்து கைப்பற்றி உள்ளனர்.மேலும் செல்போன்களை வழிப்பறி செய்தது சம்மந்தமாக பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளில் 3 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது வரை 5 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களை நீதிமன்றத்தில் உரிய நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று காணாமல் போனது மற்றும் திருடு போனது சம்பந்தமான வழக்கில் கைப்பற்றப்பட்ட செல்போன்களில் 119 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி., பா.சிபாஸ் கல்யாண் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து ஒப்படைத்தனர்.

மேலும் பொதுமக்கள் மலிவான விலையில் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து உரிய ஆவணங்கள், இரசீதுகள் எதுவும் இல்லாமல் கைபேசிகளை வாங்க வேண்டாம் எனவும் மீறி வாங்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி., பா.சிபாஸ் கல்யாண் எச்சரித்துள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *