கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், மூக்கம்பட்டி தரப்பு ஒட்டப்பட்டி ஊராட்சி புளியாண்டப்பட்டி, மாதம்பதி மத்தியில் சுமார் 100 ஏக்கர் மேச்சல் புறம்போக்கு நிலம் உள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், மூக்கம்பட்டி தரப்பு ஒட்டப்பட்டி ஊராட்சி புளியாண்டப்பட்டி, மாதம்பதி மத்தியில் சுமார் 100 ஏக்கர் மேச்சல் புறம்போக்கு நிலம் உள்ளது.
இதை முருகேசன் அலுமேலுக்கு பட்டா வழங்க துடிக்கும் அதிகாரிகளை கண்டித்து
போச்சம்பள்ளி வருவாய் அலுவலர்களை கண்டித்து நான்குரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
UDR-ல் பொன்னுசாமி பெயரில் சர்வே எண் 2. சர்வே எண் 3/1 சுமார் 3 1/2 ஏக்கர் மேச்சல் புறம்போக்கு நிலத்திற்க்கு பட்டா வழங்கியதாகவும் அதனை
பொன்னுசாமி ககிராமினி மகன் முருகேசன் என்பவர் அவருடைய மனைவிக்கு 05-02-2020 அன்று பத்திர பதிவு செய்துள்ளார்.
அதற்கு ஒட்டப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மேச்சல புறம்போக்கு நிலத்திற்கு அனுபவச்சான்று தவறுதலாக வழங்கியதின் பேரில் பத்திர பதிவு செய்துள்ளார். இதை அறிந்த ஊர் பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும்
சுமார் 2 ஆண்டுகளாக முதலமைச்சர்.
மாவட்ட ஆட்சியர், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜெமாபந்தியில் மனு அளித்தும் இதுவரையில் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இந்த பத்திரிக்கை செய்தியை அறிந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பத்திர பதிவு மற்றும் பட்டாவை ரத்து செய்ய இல்லை எனவும் கூறி கிராமமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.