காட்பாடியில் முன்னாள் இராணுவ வீரர்கள் கோரீக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

Loading

வேலூர் செப்டம்பர் 24

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் முன்னாள் முப்படை இராணுவ வீரர்களின் அனைத்துசங்கங்கள்ஒருங்கிணைந்து ஆரப்பாட்டம் நடத்தினர்.காட்பாடி அருகே உள்ள முன்னாள் ராணுவ மருத்துவமனை மற்றும் கேண்டீன் செல்லும் சாலை அமைக்கவேண்டும், வேலூர் மாவட்டத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க வேண்டும்,, ஜவான் பவன் அமைத்து தரவேண்டும், வீட்டு வரி, சுங்கவரி விலக்கு அளித்திட வேண்டும் போன்ற கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.வேலூர் மாவட்ட சங்க தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.பாஸ்கரன், ரவீந்திரன், ஜெகதீசன்,கமலநாதன்,ஜம்புலிங்கம், வடிவேலன், குமார், முனிசாமி, சதீஷ்குமார், தங்கவேலு, வாசு, சேட்டு, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏழுமலை நன்றி கூறினார்.
Attachments area

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *