கணியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்தது வேதனைக்குரியது என்றும் நேர்மையான தீர்ப்பு கண்டிப்பாக வரும் எனவும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்..

Loading

கணியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்தது வேதனைக்குரியது என்றும் நேர்மையான தீர்ப்பு கண்டிப்பாக வரும் எனவும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்..
அனைத்து தனியார் பள்ளி மற்றும் கல்லூரி சங்க கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம் திண்டல் அடுத்த வெள்ளாளர் கல்வி நிறுவனத்தில் நடந்தது..
இக்கூட்டத்தில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் சங்கங்களை சேர்ந்த மாநில மாவட்ட மற்றும் தாளாளர்கள் கலந்து கொண்டனர்..
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டார்..
இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி தற்கொலை காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளியை, மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், புதிய பாட திட்டங்கள் அறிமுகப்படுத்தும்போது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை போல் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும், பத்து ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பிறகு பள்ளியின் உடைமைகள் பாதுகாப்பு குறித்து உரிய அரசாணை அரசு வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன…
அதனைத் தொடர்ந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்,
4000 பள்ளி மாணவர்கள் கல்வி பயின்று வரும் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியை தாமதிக்காமல் உடனடியாக திறக்க வேண்டும்… சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏற்பட்டுள்ள கோடிக்கணக்கில் ஏற்பட்டுள்ள இழப்பீட்டை அரசு வழங்கிட வேண்டும் என்றும் விரைவில் அதற்கான அறிவிப்பு அரசால் வெளியிடப்படும் என்பதை நம்புவதாக அவர் தெரிவித்தார்..
கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மீதான காவல்துறையின் விசாரணை முறையாக நடைபெற்று வருவதாகவும் நீதிமன்றமும் உண்மைக்குத் தக்க தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர் மீதான நடவடிக்கைகள் தவறானது என்பதை அனைவரும் விரைவில் புரிந்து கொள்வர் என்றார்.. பள்ளியில் ஏற்பட்ட இழப்பீடு குறித்து துறை ரீதியாக கணக்கிடும் பணி நடைபெற்று வருவதாகவும் முடிவுற்றதும் அரசு இழப்பீட்டை வழங்கிட வேண்டும் என்றார்..
பள்ளியில் மாணவி உயிரிழந்தது வேதனைக்குரியது என்றும் அதன் மீதான விசாரணை காவல்துறையிலும் நீதிமன்றத்திலும் நேர்மையான உண்மையான தீர்ப்பு விரைவில் வரும் என்றார்…
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *