மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான இல்லத்தில் காலை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புத்தேரி பகுதியில் பாரத பிரதமர் மோடி அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு 17/9/2022 அன்று காலை புளியடி பகுதியில் அமைந்துள்ள மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான இல்லத்தில் காலை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பாஜக மாநில மீனவர் அணி செயலாளரும் தோவாளை உள்நாட்டு மீனவர் சங்க தலைவருமான ஐயப்பன் என்ற சகாயம் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அறுகுவிளை ராஜகுமார் அழைப்பு விடுத்தார். உடன் மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் சுரேஷ் மற்றும் நடேசன் உள்ளிட்ட பல இளைஞர்கள் கலந்து கொண்டனர்.