பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டி நாக்கில் முதல்வர் ஸ்டாலின் உருவத்தை வரைந்து பகுதிநேர ஓவிய ஆசிரியர் கோரிக்கை

Loading

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டி
நாக்கில் முதல்வர் ஸ்டாலின் உருவத்தை வரைந்து பகுதிநேர ஓவிய ஆசிரியர் கோரிக்கை
 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்து சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி  தன் நாக்கில் முதல்வர் ஸ்டாலின் உருவத்தை வரைந்துள்ளார்.
இதில் கடந்த 11 ஆண்டு காலமாக பகுதிநேர ஆசிரியர்களாக சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து கொண்டு வருகிறோம். குறைந்த வேலை, குறைந்த ஊதியம் இதனால் வாழ்க்கையில் குடும்பத்தில்  கஷ்டப்படுகிறோம். வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டி தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் வகையில் பகுதிநேர ஓவிய ஆசிரியர்
சு. செல்வம் அவர்கள் தன்னுடைய நாக்கில் முதல்வர் ஸ்டாலின் படத்தை நீர் வண்ணங்களை கொண்டு பத்து நிமிடங்களில் வரைந்தார்.
 இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்களும்,
மற்ற பகுதிநேர ஆசிரியர்களும் ஓவியாசிரியர் செல்வம் அவர்களுக்கு  வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *