ஆற்காடு தோப்புக்கான அருள்மிகு அன்னபூரணி உடனுறை கங்காதர ஈஸ்வரர் கோயிலில் இரண்டாம் மாத திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புக்கான அருள்மிகு அன்னபூரணி உடனுறை கங்காதர ஈஸ்வரர் கோயிலில் இரண்டாம் மாத திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருத்தேர் பணி குழு தலைவர் டாக்டர். பொன்.கு. சரவணன் தலைமை தாங்கினார். சிவ.பாலாஜி முன்னிலை வகித்தார். சிவ.தரணி அனைவரையும் வரவேற்றார். இதில் ஓதுவார்கள் ஒழுகூர் மணிவண்ணன் தலைமையில் சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவ. ஈஸ்வர அய்யா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில் வள்ளலார் வெங்கடேசன், சுந்தரமூர்த்தி, கோடீஸ்வரன், ஜனார்த்தனன், காஞ்சிபுரத்தார், தணிகைவேல் பரிமளா மற்றும் சிவனடியார்கள் பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.