தேசிய குடியரசு மக்கள் பேரவை அலுவலக திறப்பு விழா
சென்னை திருவொற்றியூர் சோமசுந்தரம் நகர் 2வது தெருவில் உள்ள தேசிய குடியரசு மக்கள் பேரவை அலுவலக திறப்பு விழா மற்றும் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டது.விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக துணை பதிவாளர் எஸ்.ராஜ்குமார் தேசிய கொடியேற்றினார்.
நிகழ்வில் உதயம் அறக்கட்டளையின் இயக்குநர் மற்றும் தமிழ்நாட்டின் தலைவர் எல்.ஜி.அப்ரகாம்லிங்கன் சிறப்புரையாற்றி விழாவை துவக்கிவைத்தார்.இதில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் காதர் மீரா வருகை தந்து விழாவை சிறப்பித்தார்.
இதனையடுத்து ஆர்.பி.எப்ஃ.ஐ அரக்கட்டளையின் தமிழ்நாடு இணைச்செயலாளர் டாக்டர் வி.மதன் தலைமையில் போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் சைக்கிள் பேரணி திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தமிழகம் முழுவதும் 50 நாள் மிதிவண்டி சுற்று பிரச்சாரம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது.இதில்தேசி ய தலைவர் முனைவர் ஏ.எஸ்.ஸ்ரீனிவாசன் மற்றும் தேசிய தலைமை அலுவலர் எஸ்.கார்த்திகேயன்,தேசிய தலைமை செயலாளர் வி.பிரேம்கணேஷ்,தேசிய”துணை தலைவர் ஜெ.வெற்றியரசு,தேசிய சிறப்பு பிரிவு தலைவர் இ.எஸ்.சுரேஷ் மற்றும் விசாகபதி தமிழ்நாடு இணைச்செயலாளர் ஆகியோர் தலைமையில் விழா சிறப்பாக நடைபெற்றது.