சிவகங்கையில் தாமஸ் ஆல்வா எடிசன் துளிர் இல்லத்தில் ஹிரோஷிமா தினவிழா

Loading

 

 சிவகங்கை ஆர்.ஆர்.ஆர்.கே. நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தாமஸ் ஆல்வா எடிசன் துளிர் இல்லத்தில் ஹிரோஷிமா தினத்தை முன்னிட்டு எங்கும் வேண்டும் சமாதானம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது. சிவகங்கை கிளை தலைவர் காளிராஜா தலைமை வகித்தார்.
துளிர் இல்ல மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், கிளை பொருளாளர் சங்கரலிங்கம் முன்னிலை வகித்தார்கள். கிளைச் செயலாளர் அனந்த கிருஷ்ணன் வரவேற்றார். கௌரவத் தலைவர் சாஸ்தா சுந்தரம் அறிமுக உரையாற்றினார். அறிவியல் பிரச்சார மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியமேரி ஹிரோஷிமா தின வரலாற்று பதிவுகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஹிரோஷிமா தின அமைதிக்கான உறுதி மொழியை கூற மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். ஓவியப் போட்டியில் நர்மதா தேவி முதலிடத்தையும், அருண்குமார் இரண்டாமிடத்தையும், உதயகுமார் மூன்றாமிடத்தையும் பெற்றவர்களுக்கு சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டன.
துளிர் திறனறிதல் தேர்வில் வெற்றி பெற்ற சிவகங்கை கிளையின் இளநிலை, உயர்நிலை பிரிவு மாணவர்களுக்கு கேடயமும், பரிசும் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் சுரேஷ் வாழ்த்துரை வழங்கினார். துளிர் இல்ல வழிகாட்டி ஆசிரியை லில்லி நன்றி கூறினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணவாளன் தலைமையாசிரியர் ஜெயராஜ் ஆசிரியர் சரவணன் மற்றும் மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *