தி.மு.க இராயபுரம் முன்னாள் பகுதி செயலாளர் கட்பீஸ்.அ.பழனி மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

Loading

தி.மு.க இராயபுரம் முன்னாள் பகுதி செயலாளர் கட்பீஸ்.அ.பழனி மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு சென்னை ராயுபுரம் கிழக்கு பகுதி 49வட்டம் பாலு தெருவில் நடைபெற்றது.
தி.மு.க மாணவர் அணி அமைப்பாளர் கட்பீஸ்.ப.சோமசுந்தரமூர்த்தி தலைமையில்,மாவட்ட பொருளாலர் தா.இளைய அருணா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  சிறப்பு அழைப்பாளராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகை தந்து முன்னால் பகுதி செயலாளர் கட்பிஸ்.அ.பழனி திருவுருவ படத்திற்க்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.இதில் மாவட்ட பொருளாலர் தா.இளைய அருணா,ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரிம் மூர்த்தி,ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர்,மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சோமசுந்தரமூர்த்தி,மாவட்ட அமைப்பாளர்கள்,வட்ட நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள்  அனைவரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் 500 நபர்களுக்கு நலதிட்ட உதவிகள்,கழக மூத்த முன்னோடிகள் 5 நபர்களுக்கு உதவி தொகையாக ரூ.5000,5 பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை ரூ.5000 மற்றும் ஏழை எளிய பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *