Mayor Mrs. Kalpana Anandakumar
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.63க்குட்பட்ட இராமலிங்க ஜோதி நகரில் உள்ள மாநகராட்சி இடத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை பார்வையிட்ட மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், தனியார் வாகனங்கள் நிறுத்தாதவாறு இடத்தை புனரமைத்து மேம்படுத்தி அப்பகுதியில் மாநகராட்சி விளையாட்டு மைதானம் அமைத்திட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்கள். உடன் மத்திய மண்டல தலைவர் திருமதி.மீனாலோகு, பணிகள் குழு தலைவர் திருமதி.சாந்தி முருகன், உதவி ஆணையாளர் சங்கர், உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, உதவி பொறியாளர் திரு.கணேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.