கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .

Loading

 செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் (ஜீலை 28.7.2022 முதல் ஆகஸ்ட் 10.8.2022) வரை 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்
போட்டி நடைபெறவுள்ளதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, ராம்நகர் அண்ணா சிலை அருகில் பள்ளி
மாணவ மாணவியர்கள், மாநகராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட
விழிப்புணர்வு பேரணியை ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் அவர்கள், ஓசூர் மாநகராட்சி மேயர்
எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன்
மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி,
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  அரவிந்தன் மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, வட்டாட்சியர்
கவாஸ்கர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *