ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிட் பஜார் கிளையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் விழா இன்று 14/07/2022 காலை 11.00மணிக்கு நடைப்பெற்றது
*ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிட் பஜார் கிளையில் மாற்றுத்திறனாளிகள் வட்டியில்லா கடன் வழங்கும் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான E.திருமகன் ஈவெரா MLA.,அவர்கள்,ஈரோடு மத்திய கூட்டுறவு கடன் சங்கங்கள் தலைவர் திரு.கிருஷ்ணன் அவர்கள்,ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிட் பஜார் கிளையின் தலைவர் பெரியார் நகர் திரு.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு கடன்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மேயர் திருமதி.நாகரத்தினம்,மண்டல தலைவர் திரு.தண்டாயுதபாணி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா,அம்மன் மாதேஷ்,மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயபாஸ்கர்,குப்பண்ணா சந்துரு, டிட்டோ,ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக துறையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திண்டல் பாலாஜி,தம்பி கார்த்தி 42வது மாமன்ற உறுப்பினர் திருமதி.மேனகா நடேசன், அரசு அதிகாரிகள், மற்றும் கூட்டுறவு சங்கங்களின் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.இந்நிகழ்ச்சியை ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிட் பஜார் கிளை மேலாளர் திருமதி.வசந்தி ஏற்பாடு செய்தார்.*