‘வேஷ்டி’க்கான காலம் எப்போதும் முடிவடையாது-மாளவிகா மோகன்

Loading

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

கடைசியாக இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான ‘மாறன்’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது வேஷ்டியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘வேஷ்டி’ கட்டம் எந்த நேரத்திலும் முடிவடையாது. தற்போது சமூக ஊடகங்களில் இருந்து விலகிய எனது சிறந்த நண்பரால், நான் அவளைக் குறிப்பிடவில்லை என்றால் என் தலையைத் தின்றுவிடுவாள் என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *