ஈரோடு மாவட்ட அளவில் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்- மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்

Loading

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஈரோடு காசி பாளையத்தில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரியின் தொழில் பழகுநர் பயிற்சி அப்ரண்டீஸ் சேர்க்கை முகாமினை ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை முகாமினை தொடங்கி வைத்து , பார்வையிட்டார். இம்முகாமில் ஈரோடு, கோபி, மேட்டூர் ஐடிஐ சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பதிவு செய்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அப்ரண்டீஸ் சேர்க்கைக்கான பதிவு நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர், மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனை இயக்குனரக தொழில் பயிற்சி அலுவலர், பணியமர்த்தும் பணியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *