வேலூரில் நவீன சுயம்வரம் மணமக்கள் நேர்காணல் விழா.
விஸ்வகர்ம ஜெகத்குரு சிவராஜ ஞானாச்சரிய குருஸ்வாமிகள் பாராட்டு.
வேலூர் ஜூலை 11
வேலூர் மாவட்டம்விட்டுக்கொடுக்கும் மனபான்மையுடன் வாழ்ந்தால் நிறைவான வாழ்க்கை அமையும் என வேலூரில் நடைபெற்ற மணமக்கள் நேர்காணல் விழா எனும் நவீன சுயம்வரம் நிகழ்வினை துவக்கி வைத்து அகில பாரத விஸ்வகர்ம ஜெகத்குரு சிவராஜ ஞானாச்சாரிய குருஸ்வாமிகள் கூறினார்.தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கம் சார்பில் வேலூர் மாநகரம், சித்ரா மகால் திருமண மண்டபத்தில் 3ஆவது முறையாக 10.07.2022 ஞாயிற்றுகிழமை காலை 10 மணியளவில்நடைபெற்றது.விழாவில் விஸ்வகர்ம ஜெகத்குரு சீனந்தல் மடாலயத்தின் 65வது குருமகா சுவாமிகள் சிவராஜ ஞானாச்சாரிய குருசுவாமிகள்பங்கேற்றுமணவாழ்கைசிறக்ககடைபிடைக்கவேண்டியவழிமுறைகள் குறித்தும் மூலம் நட்சத்திரம் பலன்கள் குறித்தும் 1000 பிறை கண்ட அமைப்புச்செயலாளர் வே.குப்புசாமிஅவர்களின்பிறந்தநாள்வாழ்த்துகளைகூறிபேசினார்.அப்போதுஅவர்கூறியதாவது.ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற கூற்றிக்கு ஏற்ப அனைவரும் உள்ளத் தூய்மையுடன் ஆலய வழிபாடுகளை செய்ய வேண்டும்.மேலும்மணமக்கள் நேர்காணல் விழா எனும் நவீன சுயம்வரம் நிகழ்வினை தொடர்ந்து 3வது முறையாகநடத்தும்நிர்வாகிகள் செயல் பாராட்டுதலுக்கு உரியது. மனதாரபாராட்டுகின்றேன்.
விட்டுகொடுப்பவர்கள்கெட்டுப்போவத்தில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப மணவாழ்கைசிறப்பாகஅமையவேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரும் விட்டு கொடுக்கவேண்டும் விட்டு கொடுத்து வாழ்ந்தால் நிறைவான வாழ்க்கை அமையும் என்றார்.