ஒட்டன்சத்திரத்தில் திமுக அரசை கண்டித்து பாஜகமாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம்.

Loading

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பழனி தேசிய நெடுஞ்சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் பாஜகவினர் திமுகவின் மக்கள் விரோத மனசாட்சி இல்லாத திமுகவின் தலைமையில் ஆளும் ஸ்டாலின் அவர்களின் அரசை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஒன்றிய கட்சி நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் மாநில பொதுச் செயலாளர் கூறும்போது சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியாக ஆட்சிக்குப் பொறுப்பேற்றவுடன் பெட்ரோல் ரூபாய் ஐந்தும் டீசல் விலையில் ரூபாய் 4 குறைப்பதாக ஒரு பொய்யான வாக்குறுதிகளை சொல்லி வாக்கு பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளார்.

தற்போது ஒரு வருட காலம் ஆகியும் பெட்ரோல் விலையும் டீசல் விலையும் குறைக்கவில்லை இதுவரை மத்தியில் ஆளும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் இரண்டு முறை பெட்ரோல் டீசல் விலை மத்திய அரசு குறைத்துள்ளது.

அதுபோல் திமுக அரசு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத மக்களின் விரோதமான மனசாட்சியில்லாத ஒரு ஆட்சியை நடத்தி வருகின்றனர்.

இந்த அரசு ஒன்று தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் அதேபோல் நிறைவேற்ற முடியவில்லை என்றால் அவர்கள் பதவி விலக வேண்டும் என்பது பாஜகவின் தொடர்ந்து கோரிக்கையாகும்.

அதனால் தொடர்ந்து சட்டசபை முன்பாக முதல் தொடங்கப்பட்ட போராட்டம் தொடர்ந்து பல போராட்டங்களை நாங்கள் மாவட்டந்தோறும் நடத்தி வருகின்றோம் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விட்டால் மிக விரைவில் மிகப்பெரிய அளவில் மாநில முழுவதும் பல லட்சம் பேரை திரட்டி திருச்சியில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *