“மப்பு” ஆசாமியால் “நண்பன்” தற்கொலை…! ஜி .ஹெச். முன் சாலைமறியல்.!

ஈரோடு ஜூன் 29
“குடி “மகனுக்கு நண்பனாய் இருந்தால் இது ஒரு எடுத்துக்காட்டு …
இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ,தூண்டுதலின் பெயரில் தற்கொலை செய்து கொண்டதாக ,தற்கொலைக்கு தூண்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி உறவினர்கள் காவல்துறையினருடன் முறையிட்டு ஈரோடு அரசு மருத்துவமனை எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகராட்சி கிருஷ்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் வயது 43 பழைய இரும்பு வியாபாரி திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் மாரி, என்கின்ற மாரி முத்து மது பழக்கத்திற்கு அடிமையானதால் எந்த வேலைக்கும் போகாமல் குடித்து வந்துள்ளார் நேற்று முன்தினம் அந்தப் பகுதியில் உள்ள டீக்கடையில் வெங்கடேஷ் இருந்திருக்கிறார் அவரைப் பார்த்த மாரி என்கின்ற மாரிமுத்து எனக்கு குடிக்க பணம் கொடு என்று கேட்டு அவரை வாய்க்கு வந்தவாறு பேசியது இல்லாமல் கல்லை எடுத்து அடித்தும் கேவலப்படுத்தி உள்ளார் .
டீக்கடையில் அமர்திருந்த அவர் வீட்டிற்கு சென்று இருக்கிறார் மது போதையில் இருந்த மாரி வெங்கடேஷ் வீட்டிற்கும் சென்று ரகலையில் மீண்டும் ஈடுபட்டு இருக்கிறார் இதை பார்த்த வீட்டு உரிமையாளர் தட்டிக் கேட்டுள்ளார் போதையில் இருந்த மாரி வீட்டு உரிமையாளரையும் கேவலமாக திட்டியதுடன் தனது இடுப்பு வேட்டியை அவிழ்த்து அநாகரிகமாக நடந்து கொண்டதை ரோட்டில் சென்றவர்கள் பார்த்து கேவலப்படும் அளவிற்கு ஆளாக்கியதால் மனமுடைந்த வெங்கடேஷ் வீட்டுக்குள் வந்திருக்கிறார் வீட்டிற்குள்ளும் வந்த மாரி, வெங்கடேசை அடித்ததால் மனம் உடைந்து விரக்தியில் தனது மனைவியிடம் பேசி இருக்கிறார் வெங்கடேஷ் அதற்கு அவரது மனைவி நான் இன்னும் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்துவிடுகிறேன் என கூறியுள்ளார்.
,வீட்டிற்கு வந்த மனைவி தனது கணவர் மருந்து குடித்து மயக்க நிலையில் இருந்துள்ளார் உடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர் சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சை பலன் இல்லாமல் வெங்கடேஷ் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் உயிரிழந்துள்ளார் மருந்து குடித்து உயிரிழந்ததால் தற்கொலை என்றும் நேற்று அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் பிரேதத்தை ஒப்படைக்கும் முயற்சியில் மருத்துவமனை ஊழியர்கள் ஈடுபட்ட பொழுது மருத்துவமனை முன்பு வெங்கடேசின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர் ஒன்று கூடினர்.
வெங்கடேஷ் இறப்பிற்கு மூல காரணமாகஇருந்தவர் மாரி என்கிற மாரிமுத்தான் எனவே மாரிமுத்துவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம்,போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் பேச்சுவார்த்தையில் பலன் அளிக்காததால் டவுன் டி.எஸ்.பி., ஆனந்தகுமார் மூலம் நடந்த பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த உறவினர்கள், தற்கொலைக்கு தூண்டிய மாரி என்கிற மாரிமுத்துவை கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததால் மருத்துவமனை முன்பு கூடியிருந்த உறவினர்கள் கலைந்தனர்.
மாரி என்கிற மாரிமுத்து மப்பில் இருந்ததால் வெங்கடேஷ் தரப்பில் இருந்து ஒருவர் மட்டும் காவல்துறையினர் அழைத்து சென்று கைது செய்து உள்ளதை உறுதிப்படுத்திக் கொண்டனர். சாலை மறியல் காரணமாக நகரில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அனைத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.