பேச்சியம்மன் கோவில் உற்சவ விழா

Loading

மதுரை பேச்சியம்மன் படித்துறை பூந்தோட்டம் வியாசராயபுரம் சந்து, கனகவேல் காலனி பொதுமக்களின் சார்பில் அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவிலில் உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கடந்த வியாழக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வைகை ஆற்றில் இருந்து 51 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் முளைப்பாரி, மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து அக்கினிச்சட்டி  ஊர்வலம் நடைபெறுகிறது.  ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. உற்சவ விழா ஏற்பாடுகளை தலைவர் பேச்சிமுத்து, செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *