அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கிறிஸ்தவ ஜெப கூடாரம் அமைக்க எதிர்ப்பு… அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் ஆட்சியரிடம் மனு
கன்னியாகுமரி மாவட்டம் :- அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் நேற்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர் அந்த மனுவில் கூறி இருப்பதாவது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பழமையான காசநோய் மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது.அரசு மருத்துவமனைக்கு இடம் கையகப்படுத்தும்போது அந்த இடத்தில் இருந்த இந்து ஆலயங்களையும் அரசு தினசரி பூஜையோடு பராமரித்து வருகிறது இந்த அரசு மருத்துவமனை அமைந்துள்ள இடம் அங்கு அமைந்துள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்டது.
இது இந்து ஆலயங்களுக்கு சொந்தமான இடமாவதால் அரசே இந்த ஆலயத்தைப் பராமரித்து வருகிறது. சமீபத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆக மாறிய பிறகும் ஆலய பூஜைகள் தினசரி நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த கிறிஸ்தவ மருத்துவர்களின் துணையுடன் நோயாளிகளுக்கு பைபிள் கொடுப்பதும் ஜெபம் என்ற பெயரில் நோயாளிகளை மதமாற்ற முயற்சிகளும் நடைபெற்றது.
இதனை இந்து அமைப்புகள் தடுத்து நிறுத்தினோம் இதுபோன்ற சம்பவங்கள் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக உள்ளது எனவே மாவட்டத்தில் மதக் கலவரம் நடைபெறாமல் இருக்க அரசு தலையிட்டு மருத்துவமனை வளாகத்தில் எவ்வித கிறிஸ்தவ கூடார வழிபாட்டு தலங்களும் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் தா. பாலசுப்பிரமணியம் தலமையில் மனு வழங்கப்பட்டது உடன் மாநகர தலைவர் ராஜேஷ் , மாநில செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொதுசெயலாளர் ராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமிர்தலிங்கம் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு வழங்கினர்..