மீன்பிடி மானியத்தை நிறுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு சுவிட்சர் லாந்தில் தமிழக மீனவர்கள் முற்றுகை

Loading

சென்னை, ஜூன்- 14

மீன்பிடி மானியத்தை நிறுத்தும் முயற்சிக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் தமிழக மீனவர்கள் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்

அமெரிக்கா, ஸ்வீடன், பிரான்ஸ் உள்ளிட்ட 21 வளர்ந்த நாடுகள் மீனவர்களின் மீன்பிடி மானியத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளன, இதற்கான கூட்டம் சுவிட்சர்லாந்தில் நேற்று நடைபெற்றது, கூட்டம் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் கட்டிடம் முன்பு தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் அமைப்புகள் முற்றுகையிட்டனர், இந்த முற்றுகை போராட்டத்தில் இந்திய மீனவர் சங்கத்தலைவர் எம்.டி.தயாளன், நாகப்பட்டினத்தை சேர்ந்த முத்து, ராமநாதபுரம் -தாஜிதீன், கன்னியாகுமரி டைட்டஸ், துாத்துக்குடி – பாலன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்,  இது குறித்து இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் எம்.டி.தயாளன் கூறுகையில் , மீனவர்களின் மானியத்தை நிறுத்த வளர்ந்த நாடுகள் நிறுத்துவதற்காக திட்டமிட்டுள்ளன, இது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும், எனவே அந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும், அதற்காக ஐக்கிய நாடுகளை சேர்ந்த அமைப்புகள் கூட்டம் நடத்தும் சுவிட்சர்லாந்துக்கு வந்திருக்கிறோம், எங்களது முயற்சிகளால் மீனவர்களுக்கான மானியத்தை தொடரும் என்று நம்புகிறோம்,என்றார் அவர்,

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *