மெட்ரோ ரயில் நிலையத்திற்கு டாக்டர் ஜெயச்சந்திரன் பெயர் முன்னாள் ஐபிஎஸ் மௌரியா ஆதரவு

Loading

சென்னை, மெட்ரோ  ரயில் நிலையத்திற்கு டாக்டர் ஜெயச்சந்திரன் பெயரை சூட்ட வலியுறுத்தி மக்கள் நீதி மையத்தின் மாநில துணைத்தலைவர் மௌரியா கையெழுத்திட்டார் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏதேனும் ஒன்றுக்கு 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் பெயரை சூட்ட வலியுறுத்தி கையெழுத்து இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை வண்ணாரப்பேட்டை வெங்கடாசலம் தெருவில் உள்ள டாக்டர் ஜெயச்சந்திரன்  இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கியது. இதனை சமூக ஆர்வலர் பாலம் கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் ஐடரீம் ஆகியோர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து சென்னை ராயபுரம் அறிஞர் அண்ணா பூங்கா நடப்போர் சங்கம் சார்பில் அதன் செயலாளர் குணசேகரன் ஏற்பாட்டில் நாள்தோறும் கையெழுத்து முகாம்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த கடந்த ஞாயிறு அன்று சமூக சேவை இயக்கம் சார்பில் செயலாளர் வன்னிய ராஜ் தலைமையில் நடந்த கையெழுத்து இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ரேணுகா தொடங்கிவைத்தார் இந்த நிலையில் இன்று மக்கள் நீதி மையம் துணைத் தலைவர் ஏ ஜி மௌரியா கையெழுத்திட்டு ஆதரவளித்தார். இதில் மக்கள் நீதி மையத்தின் ஊடகப்பிரிவு செயலாளர் முரளி அப்பாஸ் நிர்வாகிகள் கபிலன் உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை ராயபுரம் ரவுண்டப் குழுவின் நிர்வாகிகள் தர்மலிங்கம் மற்றும் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *