சென்னை ராயபுரம் வார்டு 49ல் மேற்க்கு  கல்மண்டபம் சாலை மற்றும் கிரேஸ் கார்டன் ஆகிய பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார்

Loading

வெயில் காலங்களில் ஏற்படும் அடிக்கடி மின்வெட்டால் பள்ளி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் அவதிகுள்ளாகிவருகின்றனர்.
அடிக்கடி உயர் அழுத்த மின்வயர்கள் பழுதடைவதால் சாலைகள் தோண்டபட்டு பழுது சரி செய்யபடுகிறது.ஆனாலும் இப்பகுதியில் இரவில் மின்வெட்டு ஏற்படுவதாகவும்.பொதுமக்களின் புகாரின் பேரில் வரும் மின்ஊலியர்கள் துண்டு உயர் மின் வயர் இணைப்புகளை கொண்டு தற்காலிக பணிசெய்துவிட்டு செல்வதால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் கிரேஸ்கார்டன் பகுதியில் மின்சார பில்லர்கள் சில துருபிடித்து பழுதடைந்த நிலையில் உள்ளது. பருவமழைக்குள் பில்லர்களை மாற்றியமைத்து சீர்செய்யவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள்.உயர் மின் அழுத்த வயர்கள் இனைப்புகள் புதுபித்தும் மின்சார பில்லர்கள் சரிசெய்தும், கிரேஸ் கார்டன் பகுதியில் புதிய உயர்மின் அழுத்த டிரான்ஸ்பார்ம்கள் அமைத்து தரவேண்டும் என மின்வாரியத்திற்க்கு பொதுமக்கள் கோரிக்கைவைக்கின்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *