கல்விக்கொள்கைக்கு எதிராக தேசிய மாநாடு வரும் 15 ம்தேதி சென்னையில் நடைபெறுகிறது, அமைச்சர் பொன்முடி துவக்கி வைக்கிறார்

Loading

சென்னை, மே- 11

தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக சென்னையில்  வரும் 15 ம்தேதி மாணவர் மாநாட்டை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கிவைக்கிறார்,
இது குறித்து மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி தேவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

 அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் தேசிய கல்விக்கொள்கைக்கு எதிரான தேசிய மாநாடு , சென்னை தி.நகர் தியாகராயர் அரங்கத்தில் வரும் 15 ம் தேதி நடைபெறுகிறது, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தேசிய தலைவர் ஸ்வம் பானர்ஜி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டை தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தொடங்கி வைக்கிறார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி, கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து , மகாராஷ்ட்ர மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜிதேந்திரா வாஹித், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் பினாய்  வி,ஸ்வம்  ஆர்.ஜே.டி எம்பி மனோஜ் குமார் ஜா, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொது செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுசெயலாளர் டி.ராஜா  மாநாட்டை முடித்து வைக்கிறார்,

வேளாண் சட்டத்திருத்தத்திற்கு எதிரான மசோதாவுக்கு  பஞ்சாப், அரியான மாநிலங்களின் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவி்த்தனர்,அந்த குரல் புதுடெல்லியை உலுக்கியது,  அதேபோன்று நீட் தேர்வுக்கு எதிரான குரல்கள் மகாராஷ்ட்ரா, கர்நாடகாவில் எதிரொலிக்க தொடங்கியிருக்கின்றன, நீட் தேர்வுக்கு எதிரான தமிழகத்தின் குரல் டெல்லியை மட்டுமல்ல: தேசத்தையே உலுக்கும், வேளாண் சட்டங்களை எப்படி மத்திய அரசு வாபஸ் பெற்றதோ, அதே போன்ற சூழல்  தேசிய கல்விக்கொள்கைக்கும் ஏற்படும் என்றார்,அவர். இந்த பேட்டியின் போது கல்வியாளர் சிவக்குமார், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தேசிய செயலாளர் தினேஷ் ஸ்ரீரங்கன்ராஜ்  ஆகியோர் உடனிருந்தனர்,

படவிளக்கம்

; சென்னையில் நடைபெறும் மாணவர் மாநாடு குறித்து முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காட்சி

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *