தமிழக அரசு சார்பில் மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமினை, மாண்புமிகு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மா.சுப்பிரமணியன் அவர்கள் துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகங்களை வழங்கினார்கள்.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், சமூகநீதிக் காவலர், கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க.

தமிழக அரசு சார்பில் மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமினை, மாண்புமிகு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்,
மா.சுப்பிரமணியன் அவர்கள்,இன்று
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி நகராட்சி, அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகங்களை வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு.வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc,MLA,.அவர்கள், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும்,சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான
உயர்திரு.தா.உதயசூரியன் B.Sc,MLA, அவர்கள் , உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்
உயர்திரு.A.J மணிகண்ணன் அவர்கள், தமிழக அரசின் மாநில சுகாதாரத்துறை செயலாளர் Dr.J.ராதாகிருஷ்ணன்,IAS, அவர்கள்,மாவட்ட ஆட்சியர்
உயர்திரு.PN.ஸ்ரீதர்,IAS ஆகியோர்கள் உடன் இருந்தனர்.
முன்னதாக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் .வசந்தம் க.
கார்த்திகேயன்,B.Sc,MLA,.அவர்களின் தலைமையில், மாண்புமிகு அமைச்சர்
மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி.புவனேஸ்வரி பெருமாள் அவர்கள் உட்பட ஒன்றிய பெரும் தலைவர்கள், துணைத் தலைவர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *