தஞ்சையில் 589 ஊராட்சிகளில் மேதின கிராம சபை கூட்டம் நடைபெற்றது

Loading

தஞ்சை. மே.2.தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சிகள் உள்ளது இந்த ஊராட்சிகளில் மே தினத்தை முன்னிட்டு இன்று தொழிலாளர் தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா தனசேகரன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் கிராம மக்கள் கலந்துகொண்டு கழிவறை வசதிகள் சாக்கடை வசதிகளை செய்து தர வேண்டும் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர் திரளான பெண்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *