கண்காணிப்பு குழு கூட்டம்  ஈரோடு எம்.பி., பங்கேற்பு! 

Loading

ஈரோடு ஏப் 27
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டரங்கில் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கண்காணிப்பு குழு கூட்டம் குழு தலைவர் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்றது
கூட்டத்தில் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் ஹெச்  கிருஷ்ணனுண்ணி ஐஏஎஸ் முன்னிலையில், ஈரோடு மேயர் நாகரத்தினம் ஆகியோர் பங்கேற்ற கூட்டம்  நேற்று  நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஒன்றிய அரசின் திட்டங்களைதேசிய அரசு வேலை உறுதி திட்டம் ,தூய்மை பாரத இயக்கம் ,பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் ,பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் ,ஆதர் கிராமம் யோஜனா பிரதம மந்திரி கிராம நகர்புற மேம்பாட்டு திட்டம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் ,தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் தேசிய நல சங்கம் ஆகிய திட்டங்களில் செயல்பாடுகள் தொடர்பாக இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறைவாரியாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது மேலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
தொடர்ந்து இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் தனிநபர் இல்ல கழிவறைகள் பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்வதற்கு ஒவ்வொரு ஊராட்சியிலும், ஆய்வு அட்டைகள் மற்றும் ஆய்வு பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது, ஆய்வு அலுவலர்கள்
கழிப்பறைகள் பார்வையிட்டு ஆய்வு குறிப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர் ஈரோடு மாவட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் நடப்பாண்டில்2333 குடியிருப்புகள் ரூ 3.92 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது, பிரதமர் மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ஊராட்சியில் உள்ள அனைத்து குக்கிராமங்களிலும் ஊரக மற்றும விவசாய சந்தைகள், மண்டி, உயர்நிலை ,மேல்நிலை பள்ளிகள் ,கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள், கால்நடை மருத்துவமனைகள் ,தரமான சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி கழுக்களுக்கு ரூ475.71 கோடி மதிப்பீட்டில் கடன் வழங்கப்பட்டுள்ளது ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி செல்லா குழந்தைகளுக்கு பயிற்சிகள், கஸ்தூரிபா காந்தி பெண்கள் உண்டு உறைவிடப் பள்ளிகள் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கான கல்வி திட்டம் போக்குவரத்து மற்றும் பாதுகாவலர்கள் வசதி, பெண்கல்வி ,கராத்தே பயிற்சி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1924 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட  ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி ,கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி/ மாவட்ட ஊரக வளர்ச்சி/ முகமை திட்ட இயக்குனர் மதுபாலன் ஐஏஎஸ் ,மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்தியா, திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி இளங்கோ, மாவட்ட வன அலுவலர் கௌதம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *