வணிகர் சங்கம் 39வது மாநில மாநாடு குறித்து வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக வியாபாரிகள் ஆலோசனை கூட்டம்
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வீராகுட்டி தெருவில் வடசென்னை வியாபாரிகள் சங்கத்திற்க்கு பாத்தியபட்ட அருள்ஜோதி நடுநிலை பள்ளியில்
வணிகர் சங்கம் 39வது மாநில மாநாடு குறித்து வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த மாநில மாநாடு குறித்து வடசென்னையில் வியாபாரிகள் சார்ந்த கிளை சங்ககங்கள் மற்றும் நிர்வாகிகளும் பங்கேற்று மாநில மாநாட்டில் வாகன ஏற்பாடு பற்றியும் வடசென்னை வியாபரிகள் சங்கம் கட்டிடம் புதுபிப்பது குறித்தும் ஆலோசனைகள் கூட்டத்தில் நடைபெற்றது.
இதில் வடசென்னை வியாபாரிகள் சங்க தலைவர் ராபட் தலைமையில்,வட சென்னை மிட்டாய் வியாபாரிகள் சங்கம்,கொருக்குபேட்டை ஜெ.ஜெ.நகர் வியாபாரிகள் சங்கம்,எழில் நகர் வியாபாரிகள் சங்கம்,தண்டையார்பேட்டை மார்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம்,புதுவண்ணாரப்பேட்டை வியாபாரிகள் சங்கம்,திருவொற்றியூர் வியாபாரிகள் பேரமைப்பு சங்கம்,ஆர்.கே.நகர் அனைத்து வாயாபாரிகள் சங்கம்,ராயபுரம் வியாபாரிகள் சங்கம்,காசிமேடு வியாபாரிகள் சங்கம்,நேதாஜி நகர் வியாபாரிகள் சங்கம்,சிமேண்ட் ரோடு வியாபாரிகள் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும் அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.