மதுரையில் விஷவாயு தாக்கி இறந்தவர்கள் மூன்று பேர் குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு சட்டபேரவையில் தெரிவித்தார்
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் பிறகு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டார் இதற்கு பதிலளித்துப் பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு
தனியார் நிறுவனத்தின் மூலம் தான் மதுரையில்
கழிவுநீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
மாநகராட்சி ஆணையருக்கோ, பொறியாளருக்கோ தகவல் தெரிவிக்காமல் தனியார் நிறுவனம் இரவில் ஆட்களை வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளது.
மாநகராட்சிக்கு தெரிந்து இருந்ததால் இந்தத் தவறு நடந்து இருக்காது. என்றும் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் தமிழக அரசின் சார்பில் இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்