தமிழ்நாடு முதலமைச்சர், சமூகநீதிக் காவலர், கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க.

Loading

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், கள்ளக்குறிச்சி  நகர பகுதியில் அமைந்துள்ள கலைஞர் திடலில், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையினை விளக்கியும்- வரலாற்றுச் சிறப்புமிக்க உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு வாக்களித்தோருக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்,மாநாட்டை காட்டிலும்,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான.வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc,MLA,அவர்களின் தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த மாபெரும் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக,
தமிழ்நாடு பொதுப்பணித்துறை,மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்.எ.வ.வேலு,M.A அவர்கள் மற்றும்  திமுக- தலைமை கழக பேச்சாளர்,
உயர்திரு.எழும்பூர் கோபி ஆகியோர்கள் கலந்து கொண்டு, கழக அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கியும், வரலாற்றுச் சிறப்புமிக்க உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றிக்கு வாக்களித்த வாக்காளர் பெருங்குடி மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் சிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும் இந்த மாநாட்டிற்கு கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும்,சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான திரு .தா.உதயசூரியன் B.Sc,MLA, அவர்கள் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.A.J மணிகண்ணன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் .வசந்தம் க.
கார்த்திகேயன்,B.Sc,MLA,.அவர்களின் தலைமையில், மாண்புமிகு அமைச்சர் எ.வ.வேலு.அவர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த மாபெரும் பொதுக்கூட்ட மாநாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய பெரும் தலைவர்கள், துணைத்தலைவர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் தலைவர்கள்,துணைத் தலைவர்கள், மாவட்ட,ஒன்றிய, நகர,பேரூர் கவுன்சிலர்கள்,கழக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் என பல்லாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *