தமிழக சட்டபேரவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் 

Loading

தமிழக சட்டபேரவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்
தமிழக சட்டபேரவையில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது இதற்கு அமைச்சர் சக்கரபாணிபதிலளித்த போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டார்.அதை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர் அப்போது  அவர் பேசியவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
சட்டப்பேரவையிலிருந்து  வெளிநடப்பு செய்த பின்னர்  எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  அளித்த பேட்டி
  97வது அரசியல் சாசன சட்டத்தின் படி தன்னாட்சி பெற்ற கூட்டுறவு ஆணையம் மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு இரண்டு முறை தேர்தல் நடத்தப்பட்டது,
அதிமுக ஆட்சியில்இருந்த போது சங்க தேர்தல் நடைபெற்று கூட்டுறவு சங்கம் சிறப்பாக இயங்கி வந்தது, அவர் மறைவிற்கு பின்னும் நடைபெற்றது.
அதிமுக கொண்டு வந்த காரணத்தினாலே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளின் பதவிகாலம் வேண்டுமென்றே குறைக்கப்பட்டுள்ளது,
திமுக அரசு ஒட்டு மொத்தமாக கூட்டுறவு சங்கங்களை கலைத்து தங்களுடைய கட்சியை சேர்ந்தவர்களை கொண்டு வர வேண்டும் என செயல்பட்டு வருகிறது.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 5 நிமிடம் பேசினால் அமைச்சர்கள் 50 நிமிடம் பதிலளித்து நாங்களே முழுவதும் பேசியதாக எடுத்து கொள்கின்றனர்,
பிரதான எதிர்கட்சிக்கு போதிய நேரம் ஒதுக்கி தரப்படவதில்லை என குற்றம்சாட்டியவர், உறுப்பினர் இப்படிதான் பேச வேண்டும் என அமைச்சர் கூறுவது ஏற்புடுயதல்ல
சட்டமன்றத்தில் பேச்சுரிமையும் பறிக்கபடுகிறது என்றார்.
பொங்கல் பரிசான 21 பொருட்கள்  முறையாகவோ தரமாகவோ வழங்கவில்லை,
தவறுகளை ஆதாரத்துடன் எடுத்து கூறிய போதும் உணவுத்துறை அமைச்சர் எங்கும் தவறு நடைபெறவில்லை என்ற தவறான கருத்தை அவையில் எடுத்து வைத்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் சாலையே போடமால் பணம் பெற்றிருப்பது குறித்து செய்தி வெளியான பின்,
தற்போது அவசர அவசரமாக சாலை போட்டு வருகின்றனர்,
இது குறித்து முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் புகார் அளித்துள்ளார் இந்த அரசு விசாரித்து  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டப்பேரவையில் விவாதிக்க கண்டிஷன் போடமுடியாது: இபிஎஸ்
சட்டப்பேரவையில் விவாதிக்க கண்டிஷன் போடமுடியாது என்றும், இது அரசா அல்லது தன்னாட்சி அமைப்பா எனவும் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்..
சட்டப்பேரவையில், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, கூட்டுறவு சங்கங்களின் முறைகேடுகளை சீர்செய்வதோடு, அதனை பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி,சாதாரண மக்களை கூட்டுறவு சங்க தலைவராக உருவாக்கியவர் கலைஞர் தான் என்றும், 2006ம் ஆண்டு கலைஞர் வேறுபாடின்றி கடன் தள்ளுபடி செய்தார் எனவும் கூறினார்..
மேலும், அதிமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக பொது விநியோகத் திட்டத்திற்கான மானியம் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டிய அவர், சுமார் 600 கோடி அளவிலான மானியத்தை வங்கிகளுக்கு அதிமுக அரசு செலுத்தவில்லை என்றுன், அந்த நிதியை தற்போதைய தமிழக முதல்வரே வங்கிகளுக்கு வழங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய *நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,* உறுப்பினர் வேறு கேள்விக்கு சென்றால் விவாதம் தொடராது இல்லையேல் இதற்கான விளக்கத்தை நான் கூறுவேன் என தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய *சபாநாயகர்* , இருவருமே ஒரே மாவட்டத்தை சார்ந்தவர்கள் தான், இடம் பார்த்து பேசிக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டார்.
அப்போது எழுந்து பேசிய எதிர்கட்சித்தலைவர் *எடப்பாடி பழனிசாமி,* இது ஜனநாயக நாடு என்றும் விவாதிக்கவே சட்டப்பேரவை கூறியுள்ளதாக, இதில் கண்டிஷன் எதுவும் போடமுடியாது என கூறிய அவர், இது அரசா அல்லது தன்னாட்சியா எனவும் கேள்வி எழுப்பினார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *