நவாமரத்துப்பட்டி – கே.புதூரில் ஸ்ரீ ஸ்படிக லிங்கேஸ்வரர் திருக்கோயிலில்  மூன்றாம் வளர்பிறை சந்திர தரிசன சிறப்புவழிபாடு 

Loading

ஒட்டன்சத்திரம். ஏப்;:-
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், முருநெல்லிக்கோட்டை ஊராட்சி,
குருநாதநாயக்கனூர் கிராமம், நவாமரத்துப்பட்டி அருகே உள்ள கே.புதூரில் எழுந்தருளியுள்ள
அருள்மிகு ஸ்ரீ ஸ்படிக லிங்கேஸ்வரர் திருக்கோயிலில் மூன்றாம் வளர்பிறை சந்திர தரிசன
சிறப்பு வழிபாடு நடந்தது.
இதை முன்னிட்டு உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி மலையிலிருந்து கலசங்களில் பக்தர்கள் புனித
நீர் எடுத்து வந்தனர். பின்னர் புனித நீருடன் பஞ்சலிங்கேஸ்வரர் மலையை சுற்றிவந்தனர். அதன்
பிறகு கோவிலில் உள்ள பஞ்ச லிங்கேஸ்வரர், ஸ்படிக லிங்கேஸ்வரர் ஆகிய மூலவர்களுக்கு புனித
நீர் ஊற்றி சிறப்பு அபிசேகம் நடத்தப்பட்டது இதனை அடுத்து மாலையில் வானத்தில் மூன்றாம் பிறை
வளர்பிறை சந்திர தரிசனம் காணும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திண்டுக்கல், வேடசந்தூர்,
ஒட்டன்சத்திரம் ரெட்டியார்சத்திரம். மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த
பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு பிரசாதம்
மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த பக்தர்கள் அனைவரையும் முருநெல்லிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர்
வி.சின்னு (எ) முருகன், துணைத்தலைவர் வி.பி.செந்தில்குமார், திமுக ஒன்றிய செயலாளர் எஸ்.மணி,
ஒன்றிய துணைப்பெருந்தலைவர் டி.ராஜேஸ்வரி தமிழ்ச்செல்வன், மாவட்ட கவுன்சிலர் எஸ்.சுப்புலட்சுமி
சண்முகவேல் ஆகியோரும் ஸ்ரீஐய்யப்பா டிம்பர்ஸ் மற்றும் டயர்ஸ் எ.மணிகண்டன், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ராமர் கமிஷன்மண்டி எம்.ராமர், சாலையூர் நால்ரோடு சுள்ளெரும்பு இந்தியன்
ஆயில் டீலர் கவிதா ஏஜன்சி, நவாமரத்துப்பட்டி ரெயின்போ பேக்கரி உரிமையாளர் எஸ்.சிவா,
சிவனடியார் பி.குங்குமராஜா, மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்றனர். இவ்விழாவிற்கான
ஏற்பாடுகளை ஸ்ரீ ஸ்படிக லிங்கேஸ்வரர் அறக்கட்டளை கோயில் பூசாரி பி.ஜெயராமன், நிர்வாகஸ்தர்
பி.வீரகேத்து ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *