மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் 2 -ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற அமாவாசை ஊஞ்சல் உற்சவம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பங்குனிமாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் . மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில் மாதந்தோறும் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம்
நடைபெறுவது வழக்கம் .
இதில் தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரி , கர்நாடகா , உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும்
ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம் . இந்நிலையில் கரோனா தொற்று கட்டுப்பாடுகள் தொடர்பாக கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடைசியாக பக்தர்கள் முன்னிலையில் ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது .
இதன் பின்னர் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் இன்றி கோயில்
உள்வளாகத்தில் பூசாரிகளால் ஆகம விதிபடி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று வந்தது .இந்நிலையில் கரோனா கட்டுப்பாடுகள் விலக்கி பட்டதை கொள்ளப் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு வியாழக்கி ழமை இரவு லட்சகணக் கான பக்தர்கள் புடை சூழ அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார் .
அன்று காலை மூலவர் அருள்மிகு அங்காளம்ம னுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற் றது . பின்னர் மாலை உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடைபெற்று பல் வேறு மலர்களால் அலங்க ரிக்கப்பட்டு இரவு 12 மணி அளவில் கோயில் எதிரே உள்ள ஊஞ்சல்மண்டபத்தில் லட்சகணக்கான பக்தர்கள்கர கோஷத்துடன் அங்காளம்மன் பராசக்தி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி காட்சியளித்தார் .
பின்னர் கோயில் பூசாரிகள் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடினர் . கூடியிருந்த பக்தர்கள் தேங்காய் மற்றும் எலுமிச்சை பழத்தில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர் . விழா இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் க.ராமு தலைமையிலான அலுவலர்கள் மற்றும் மேல் மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் பூசாரி தலைமை யிலான அறங்காவலர்கள் மற்றும் திருக்கோயில் பணி யாளர்கள் செய்திருந்தனர் .
விழாவில் மாவட்ட ஆட்சி யர் த . மோகன் மற்றும் எஸ்பி ஸ்ரீநாதா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர் . பாதுகாப்பு ஏற்பாடு களை செஞ்சி டிஎஸ்பி . ( பொ றுப்பு ) ரவீந்திரன் தலைமை யிலான போலீஸார் ஈடுபட் டிருந்தனர் . மேலும்
தீயணைப்பு துறை , மருத்துவத் துறை உள்ளிட்டோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டிருந்தனர் .