வடபத்ரகாளியம்மன் 36ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அக்னி சட்டி திருவிழா

Loading

சென்னை ராயபுரம் சிங்காரத்தோட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு சின்னசேனியம்மன் வடபத்ரகாளியம்மன் 36ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அக்னி சட்டி திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
அக்னி சட்டி திருவிழாவில் பாரதிய ஜனதாகட்சியின் மாநில துனைதலைவர் எம்.என்.ராஜா,மாநில பொதுசெயலாளர் கரு.நாகராஜன்,வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஸ்ணகுமார்,வடசென்னை கிழக்கு மாவட்ட நெசவாளர் பிரிவு மம்மி டாடி பாஸ்கர் ஆகியோர் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.இதில் மண்டல் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து அக்னி சட்டி திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி வந்து அவர்களது நேர்த்தி கடனை செலுத்தி அருள்மிகு சேனியம்மன்னை  வழிப்பட்டனர்.இதில் திரளான பக்தர்கள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அம்மன் அருள் பெற்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *