லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் போர்; ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தொடர்ந்து பயன்படுத்தும் ரஷியா

Loading

கீவ்,
உக்ரைன் மீது ரஷியா 28- வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-
 உக்ரைனில் உள்ள முக்கியமான இலக்குகளை தாக்குவதற்கு அதி நவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தொடர்ந்து பயன்படுத்துவதாக ரஷியா தெரிவித்துள்ளது.
உக்ரைனில் உணவு உற்பத்தியை மீண்டும் தொடங்கத் தவறினால், ‘அது பூமியில் நரகமாக மாறி விடும் என  உலக உணவுத் திட்ட இயக்குநர் டேவிட் பீஸ்லி  கூறியுள்ளார்.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது உலகளாவிய உணவுப் பற்றாக்குறையைத் தவிர்க்கும்.  போர் தொடர்ந்தால் உலகம் முழுவதும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.
உக்ரைனும் ரஷ்யாவும் உலகின் மொத்த தானியங்களில் 20 முதல் 30 சதவீதம் வரை உற்பத்தி செய்கின்றன என்று அவர் கூறினார்.
0Shares

Leave a Reply