சேலம் வந்த சென்னை ரயிலில் ரூ.11.61 லட்சம், 8.80 கிலோ தங்க நகைகளுடன் பிடிபட்ட கோவை வாலிபர்

Loading

சேலம், மார்ச் 13-
சேலம் வந்த சென்னை ரயிலில் ரூ.11.61 லட்சம், 8.80 கிலோ தங்க நகைகளுடன் பிடிபட்ட கோவை வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில்களில் குற்ற சம்பவங்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக பொருட்களை கொண்டு செல்லும் சம்பவங்களை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் அனில் குமார் ரெட்டி, போலீசார் மாரிமுத்து, அனில் சிவசக்தி ஆகியோர் சோதனை நடத்தினர்.
ரயில் கருப்பூர் அருகே வந்துகொண்டிருந்தது, எஸ் பி பெட்டியில் சோதனை செய்தபோது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு நபர் இருந்தார்.

அவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு ப்பின் முரணாக பதில் அளித்தார். இதனையடுத்து அவர் வைத்திருந்த கை பையை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் திறந்து சோதனை நடத்தினர். அதில் 26 பாலித்தீன் பைகளில் சரியான ஆவணங்கள் இல்லாமல் ரூ.11 லட்சத்து 61 ஆயிரத்து 430 இருந்தது, மேலும் அந்த பையில் 880 கிராம் தங்க ஆபரணங்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.44 லட்சம் ஆகும். இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது சரியான ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணை செய்ததில் அதனைக் கொண்டு வந்தவர் கோவை களம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வர மூர்த்தி(27) என்பது தெரியவந்தது.

இதையடுத்து விக்னேஸ்வர மூர்த்தியை ரெயில்வே பாதுகாப்பு படையினர் போலீ சாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ ரூ.11 லட்சத்து 61 ஆயிரத்து 430 மற்றும் ரூ.44 லட்சம் மதிப்பிலான தங்க ஆபரணங்களையும் பறிமுதல் செய்து சேலம் வருமானவரி அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விக்னேஸ்வர மூர்த்தியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *