கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவப்பிரியா அவர்கள் தலைமயில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம் நடைபெற்றது. உடன் மேனாள் தமிழ்வளர்ச்சி துணை இயக்குநர் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) முனைவர் க.சிவசாமி, கன்னியாகுமரி மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பி.ரெசினாள்மேரி உட்பட பலர் உள்ளார்கள்.