கணவன் மண்டையை உடைத்த கள்ளக்காதலன்
கணவனின் சித்தி மகனுடன் மனைவி உல்லாசம் தட்டிக்கேட்ட கணவன் மண்டையை உடைத்த கள்ளக்காதலன்
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் கணவரின் சித்தி மகனுடன் கள்ள தொடர்பில் இருந்த மனைவியை கண்டித்து ஏற்பட்ட மோதலில் கணவர் மற்றும் அவரது அண்ணனின் மண்டையை உடைத்த கள்ள காதலன்.
தப்பி ஓடிய கள்ளக்காதலன் மற்றும் அவரது சகோதரனை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பெருமான்குழி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி அர்ச்சனா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் அர்ச்சனாவுக்கு கணவரின் சித்தி மகனான செந்தில் என்பவருடன் கள்ளதொடர்பு ஏற்பட்டு இருவரும் ராஜேஷ் இல்லாத நேரத்தில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை வேளையில் அர்ச்சனாவும் செந்திலும் தகாத உறவில் இருந்ததாக ராஜேஷுக்கு தகவல் தெரிந்துள்ளது.
இதனையடுத்து ஆவேசத்துடன் வந்த ராஜேஷ் மனைவியுடன் தகராறு செய்து விட்டு செந்திலின் வீட்டிற்கு சென்று ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்து வீட்டின் முன்பக்கம் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளார். இதனையறிந்த செந்தில் வீட்டிற்கு வரவே இருவரும் மாறி மாறி மோதி கொண்டுள்ளனர். இதனைக் கண்டு ராஜேஷின் தம்பியான ரவிக்குமாரும் சேர்ந்து செந்திலை தாக்கி உள்ளனர்.
இதனைக்கண்டு பயந்து செந்தில் ஓடவே ராஜேஷ் மற்றும் ரவிக்குமார் விரட்டி சென்றுள்ளார். செந்தில் பயந்து ஓடுவதை கண்ட செந்திலின் அண்ணன் மகன் தினேஷும் அங்கு வந்து அருகில் கடந்த மரக்கட்டை மற்றும் செங்கல் எடுத்து ராஜேஷையும் ரவிக்குமாரையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் ராஜேஷுக்கும் ரவிக்குமாருக்கும் மண்டை உடைந்து இரத்தம் கொட்டி உள்ளது.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வர செந்தில் மற்றும் தினேஷ் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனையடுத்து காயம் அடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கருங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர்கள் அளித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.