தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த ரமேஷ் மற்றும் பாஸ்கர் உலோகத்தினால் ஆன பூஜை பொருட்கள் இருந்ததைக் கண்டு J4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
சென்னை: 13வது மண்டலத்துக்கு உட்பட்ட 169 வது வார்டில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த ரமேஷ் மற்றும் பாஸ்கர் அவர்கள் காந்திமண்டபம் பேருந்து நிறுத்தும் அருகாமையில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றினை கண்டெடுத்து ஆய்வு செய்ததில் உலோகத்தினால் ஆன பூஜை பொருட்கள் இருந்ததைக் கண்டு அவர்களுடைய மேற்பார்வையாளர் ஜானி மற்றும் பணியாளர் குழு அதிகாரி பாலாஜி அவர்களின் உதவியுடன் J4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதனைப் பெற்றுக் கொண்ட காவல்துறை ஆய்வாளர் நாகராஜன் அவர்கள் அண்மையில் இவை அருகாமையில் உள்ள கோவிலில் திருடு போனவை என்றும் மேலும் நேர்மையாக ஒப்படைத்த தூய்மை பணியாளர்களை வெகுவாக பாராட்டினார்.