நண்பர் மனைவியை பலாத்காரம் செய்ய இப்படி ஒரு காரணமா.?

Loading

நண்பர் மனைவியை பலாத்காரம் செய்ய இப்படி ஒரு காரணமா.? போலிசாரையே அதிரவைத்த நபர்.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அருகே எஸ்.யூ.வனம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகனுக்கு ரேவதி (26) என்ற மனைவி இருந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு கருத்து வேறுபாடு எற்ப்பட்டதன் காரணமாக இருவரும் தனியே வசித்து வருகின்றனர். ஆரணியிலுள்ள வாட்டர் கம்பெனியில் ரேவதி வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது இலுப்பகுணம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற டிரைவருடம் பழக்கம் ஏற்பட்டது. மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், ரேவதிக்காக அவர்களை பிரிந்துள்ளார். இருவரும் ஆரணியில் வாடகைக்கு வீடு எடுத்து கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

இத்தகைய நிலையில், மணிகண்டன் வீட்டிற்கு அருகில் அவரது நண்பர் கோகுல்ராஜும் வசித்து வந்துள்ளார். இரவு 8.30 மணியளவில் மணிகண்டன் வீட்டிற்கு அவரது நண்பர் ஜெயசூர்யாவுடன்(22) கோகுல்ராஜ் சென்றுள்ளார். அப்போது மணிகண்டன் வீட்டில் இல்லை.

கணவரின் நண்பர்கள் என்ற காரணத்தால் உள்ளே அழைத்து என்னவென்று விசாரித்துள்ளார். ஆனால், அந்த கொடூர நண்பர்கள் உள்ளே நுழைந்து வீட்டை பூட்டி குழந்தைகளை ஒரு அறையில் அடைத்துவிட்டு ரேவதியை படுக்கை அறைக்கு அல்லேக்காக தூக்கி சென்று அவரது வாய், கை மற்றும் கால்களைக் கட்டி நண்பர்கள் இருவரும் மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்திருக்கின்றனர். இதனால், ரேவதி உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின், ரேவதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து கோகுல்ராஜ் மற்றும் ஜெய்சூர்யா இருவரையும் கைது செய்து, விசாரணை மேற்க்கொண்டதில் கோகுல்ராஜ் தனது வாக்குமூலத்தில், ” ரேவதி எனது காதல் மனைவியை அடிக்கடி திட்டி கொண்டே இருந்தார். இதனால் தான் ரேவதியை பழிவாங்க நண்பனின் மனைவி என்றும் பார்க்காமல் பாலியல் வன்கொடுமை செய்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *